Was it right to eliminate Lakshmi Tripathi from Bigg Boss 5?

12 Comments

  • kathirvelu - 12 years ago

    ஆன்மா என்பது எது ?
    ஆன்மா என்பது எது.!

    ஆன்மா என்பது சிறிய அணு வடிவம் கொண்டது.அதன் சக்தி கோடி சூரிய பிரகாசம் உடையது.அதில் இருந்துதான் உயிர் உண்டாகிறது.இது எல்லா ஜீவ
    ராசிகளிலும் உள்ளதாகும் பல கோடிபிறவிகள் எடுத்து இறுதியில் ,மனித தேகம் எடுக்கிறது. அதனால்தான் அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்றார்கள் நம்முடைய பெரியவர்கள் .

    இது மனித தேகத்தில் எப்படி காரியப் படுகிறது என்றால்,மனிதேகத்தில் புருவமத்தியில் இருந்துகொண்டு உள்ளது .அதற்கு லலாடம் ஸ்தானம் என்பார்கள் .அதன் வண்ணம் கால பங்கு பொன்மை.முக்கால் பங்கு வெண்மை நிறம் கொண்டதாகும் .பல பிறவிகள் எடுத்த பதிவுகள் ,அதன் செயல்பாடுகள் எல்லாம் அந்த ஆன்மாவில் பதிவாகி இருக்கும் .அந்த பதிவுகளை களைந்து ,[அதாவது நீக்கி ]உண்மையான அதன் தன்மையைத் தெரிந்துக் கொள்ள மனித தேகம் கொடுக்கப் பட்டுள்ளது .

    அதன செயல் பாட்டிற்க்காக ஐம புலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது .அதற்குப் பெயர் உபகாரக் கருவிகலாகும்.அதுதான் கண், காது,மூக்கு,வாய் உடம்பு என்பதாகும் .இவை கண்களுக்குத் தெரியும் .இவைகள் மூலமாக உடம்பின் உள்ளே கண்களுக்குத் தெரியாமல் செயல்படும் கருவிகள் ஏராளம் .அதில் முக்கியமானது.

    இந்திரியங்கள் என்னும்;-- கண்,காத்து ,மூக்கு,வாய்,உடம்பு என்பதாகும்
    கரணங்கள் என்னும் ;--,மனம், புத்தி,சித்தம் .அகங்காரம் .ஆச்சர்யம் ,என்பதாகும்
    ஜீவன் என்னும் ;--உயிராகும் .
    ஆன்மா என்பது .;--அருள் நிறைந்த ஆற்றல் என்னும் ஒளி அணுவாகும்.

    ஆன்மா எனபது இல்லை என்றால் எதுவும் இயங்காது .ஆன்மாவின் தேவைக்காக அனைத்து கருவி காரணங்களையும்,அதுவே உருவாக்கிக் கொண்டு உள்ளதாகும்.ஆதலால் ''நான் என்பது ஆன்மாவே'' என்பது உண்மையாகும்.

    ஆன்மா உண்மையை அறிந்து கொள்ள கருவிகளை இந்திரியங்கள்,கரணங்கள், ஜீவன் என்னும் புறக் கருவிகளுக்கு வேலை கொடுள்ளது.ஆனால் புறத தோற்ற க் கருவிகளான ஐம புலன்கள் கண் ,காத்து மூக்கு,வாய்,உடம்பு போன்ற கருவிகள், வெளியில் உள்ள மாயா தோற்றம் உள்ள அழகில் மயங்கி,மனம் புத்தி,சித்தம் அகங்காரம்,ஆச்சர்யம் .போன்ற கருவிகளுக்கு அனுப்பி விடுகிறது .இவற்றை ஜீவனும் ஆன்மாவும் மறுக்க முடியாமல் ஏற்றுக் கொள்ளும் கட்டாயம் உண்டாகி விடுகிறது .அந்த அளவிருக்கு மாயா சத்தியின் பலம் உள்ளது, மாயா சத்திக்கு அந்த அதிகாரம் கொடுக்கப் பட்டு உள்ளது [.இதை விரிக்கில் பேருக்கும் ].

    அதனால்தான் புறக் கருவிகளை வெளியில் செல்ல விடாமல் உண்மையை அறிந்து கொள்ள ஆன்மாவை தொடர்பு கொள்ள வேண்டும் என்று உண்மையை அறிந்த ஞானிகள் மக்களுக்கு பல வழிகளில் பலவிதமாக சொல்லி உள்ளார்கள் .மண் ஆசை,பெண் ஆசை,பொன் ஆசை.இந்த மூன்று ஆசைகள்தான் அனைத்திற்கும் காரணம் என்று சொல்லி உள்ளார்கள் .

    உடம்பின் முக்கிய கருவிகள் எது என்றால் .கண் ,மனம் ,என்பாதாகும் .கண்களில் பார்ப்பது மனதில் பதிவாகும் மனதில் பதிவானது அனைத்தும் செய்யும் .அதனால்தான் மனதை அடக்க வேண்டும் என்கிறார்கள் .கண்ணும் மனமும் எப்படி அடங்கும் .கண் போகும் இடம் மனம் போகும் .கண்கள் வெளியே செல்லாமல் புருவ மத்தியில் உள்ள ஆன்மாவைத் தொடர்பு கொள்ள வேண்டும்.எப்படி தொடர்பு கொள்ள முடியும்? அதற்குததான் தியானம் ,தவம .யோகம ,வழிபாடு என்று வைத்துள்ளார்கள். இதனால் ஆன்மாவில் உள்ள பதிவுகள் நீங்கி விடுமா என்றால் நீங்காது என்கிறார் வள்ளலார் .

    ஆன்மாவின் பதிவுகள் எப்படி நீங்கும் என்றால் உயிர்களுக்கு உபகாரம் செய்தால்தான் நீங்கும் என்கிறார் வள்ளலார் .ஏன் அப்படி செய்ய வேண்டும் ?என்ற கேள்விகள் எல்லாருடைய மனதில் உருவாகும் இல்லையா?நாம் மாயா சத்திகள் மூலமாக பல உயிர்களின் உதவியால்தான் அனைத்தும் அனுபவித்து உள்ளோம் .அதை திருப்பி தரவேண்டும் இல்லையா ?அதுவே நாம் வாங்க்கியக் கடனாகும் ,அந்தக் கடனை திருப்பித் தராமல் .தியானம் ,தவம ,யோகம ,வழிபாடு என்று செய்தால் .கடன் தீர்ந்து விடுமா ?தீராது .அதைத் தீர்ப்பதுதான் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்றார் வள்ளலார் .ஜீவ காருனயமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றார் வள்ளலார்,சாவி இல்லாமல் போனால் ஆண்டவரின் மேல் வீட்டுக்கதவு திறக்காது.உங்கள் ஆன்மாவை சுத்தமாக்க வேண்டுமானால் ஜீவ காருண்யமே வழியாகும் என்றார்.ஜீவ காருண்யமே,வழிபாடு என்றார் .வேறு எந்த வழிகளில் சென்றாலும் உண்மையான இறை நிலையை அடையமுடியாது என்று திட்டவட்டமாக ''திருஅருட்பா'' என்னும் நூலில் பதிவு செய்துள்ளார்.

    சொல்லியதோடு இல்லாமல் வாழ்ந்தும் வழி காட்டி உள்ளார் .அவர்போல் வாழ்ந்தால்தான்.மரணத்தை வென்று இறைவனை காண முடியும் .வேறு எந்த வழியாலும் காணமுடியாது அருள் பெற முடியாது ''நான என்னும் ஆன்மாவை'' காண இதுவே வழியாகும்.

    வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்கள் ;--

    கண்டதெல்லாம் அநித்தியமே கேட்டது எல்லாம் பழுதே
    கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே
    உண்டது எல்லாம் மலமே உட கொண்டது எல்லாம் க

  • kathirvelu - 12 years ago

    உலகம் வெப்பமயமாக என்ன காரணம் ?

    உலகம் வெப்பமயமாக என்ன காரணம் ?

    ஆன்மநேய அன்புடைய நண்பர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் .கருணை என்னும் மாபெரும் சக்தியை மக்களை மறந்து விட்டார்கள் .கருனையினால் தான் இந்த உலகை காப்பற்ற முடியும் என்ற உண்மையை அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் .கருணை இல்லாமல் உயிர்களை கொன்றுதான் தின்றுதான் வாழ்வோம் என்ற மன அழுத்தம் மக்கள் மனதில் பரவி விட்டது.

    இதனால்தான் உலகில் உள்ள துன்பங்களுக்கு காரணம் என்பதை ஏன் புரிந்து கொள்ளவில்லை .உலகில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ,விஞ்ஞானிகள்,அறிவியல் வல்லுனர்கள்.உலக ஐநாசபை அணு ஆராய்ச்சியாளர்கள் ,மதவாதிகள் ,சமயவாதிகள் ,ஆட்சியாளர்கள் .பகுத்தறிவு சிந்தனையாளர்கள் .மனித நேயமுள்ளவர்கள் .இன்னும் பல சிந்தனையாளர்கள் .இருந்தும் இந்த உண்மையை அறியாமல் இருக்கிறார்கள் என்றால் இவர்களுக்கு உண்மை தெரியவில்லையா ?உண்மை தெரிந்தும் இந்த உலகம் எப்படிப் போனால் நமக்கு என்ன என்று இறுமாந்து இருக்கிறார்களா?என்பது தெரியவில்லை .

    ஒவ்வொரு நாளும் பல கோடி உயிர்கள் மனிதனால் அழிக்கப் படுகிறது .அந்த உயிரின் ஆற்றல் அந்த உயிரின தன்மை என்னவென்று யாருக்கும் தெரியவில்லை ,அதன் தன்மை -- ஒரு உயிரின் தன்மை ஒரு கோடி சூரிய பிரகாசம் ஆற்றல் உள்ளது .அதன் ஆற்றலை மறைத்துக் கொண்டு ஐம பூதமான மண் .நீர் .அனல்,காற்று ஆகாயம் போன்ற கருவிகளைக் ,கொண்டு உடம்பு என்னும் வீட்டைக் கட்டிக் கொண்டு இந்த உலகத்தில் வாழ்கிறது .அப்படியே பல பல பிறவிகள் எடுத்துக் கொண்டு வாழ்ந்து இறுதியாக மனிதப் பிறவி எடுத்து வாழ்கிறது.

    எல்லா பிறவியை விட உயர்ந்த பிறவி மனிதப் பிறவி என்று உணர்ந்தும் .பகுத்தறிவு பெற்ற மனிதன் ,ஒரு உயிரைக் கொள்வதும் கொன்ற அந்த துர்நாற்றம் உள்ள அசுத்த மாமிச உணவை உண்பதும் ,குற்றம்,தவறு, அநியாயம் அக்கிரமம் என்பதை ஏன் உணராமல் போனார்கள் .அறிவு இல்லையா ?அறிவு தெளிவு இல்லையா?அறிவு இருந்தும் பழக்கத்தினால் செய்கிறார்களா ?என்பது தெரியவில்லை .

    இன்று உலகம் வெப்பமயமாக மாறிக் கொண்டு இருப்பதற்கு முக்கியக் காரணம் உயிர்களைக் கொல்வது புலால் உண்பது தான் என்பதை மறுக்க முடியாது மறைக்க முடியாது .இதுதான் உண்மையாகும் .உயிரைக் கொல்லுகின்றபோது ஆன்மாவில் உள்ள ஒளிக கதிர்கள் துடித்துடித்து வெளியே கக்குகிறது .அதனுடைய வெப்பம் அளவில் அடங்காதது .அந்த வெப்பம்தான் மண் ,நீர் அனல்,காற்று .ஆகாயம் அனைத்திலும் கலந்து உலகம் முழுவதும் வெப்பம் பரவிக் கொண்டு வருகிறது, /இப்படியே விட்டு விட்டால் உலகமே வெப்பக் காடாக மாறி மனிதனும் மற்ற உயிர்களும் அழிந்து விடும்.

    இனிமேலாவது உயிர்களை கொல்லவும்.புலால் உண்ணவும் கூடாது என்பதை உலகமும் உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் அறிவைக் கொண்டு சிந்தித்து உணரவேண்டும் வாழ்க உலக உயிர்கள் .

    அன்புடன் ஆன்மநேயன் --கதிர்வேலு.

  • kathirvelu - 12 years ago

    சமயம் மதம் சாதி அனைத்தும் பொய்யானது !

    சமயம் மதம் சாதி அனைத்தும் பொய்யானது !

    கடவுளுக்கு பொய்யான கற்பனைக் கதைகளை சொல்லி எழுதி வைத்து விட்டார்கள் .உண்மையாக இருப்பதாக கோயில்களையும் சிலைகளையும் வைத்து மக்களை மூட நம்பிக்கையில் வாழ வைத்து விட்டார்கள் .இதில் இருந்து தப்பிக்க முடியாமல் மக்கள் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள் .இதை மறுக்க எத்தனையோ அறிவாளிகளும் .பகுத்தறிவு உள்ளவர்களும் மக்களுக்கு எடுத்து சொல்லியும் மக்கள் கேட்கவில்லை .

    இதை எல்லாம் ஒழித்து கட்ட வந்தவர்தான் வள்ளலார் என்ற அருளாளர் .!

    ஆன்மீக வாயிலாக உலக உண்மைகளையும் கடவுளின் உண்மைத் தன்மையும் வெளிச்சம் போட்டு காட்டி விட்டார்கள் .இப்போது மக்கள் வள்ளலார் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு வருகிறார்கள் .அதற்கு சமய ,மத வாதிகள் எதிர்ப்பு குரல் கொடுத்துக் கொண்டு வருகிறார்கள் .அதையும் மீறி மக்கள் புரிந்து கொண்டு வருகிறார்கள் .

    விஞ்ஞானம் ,அறிவியல் அணு ஆராய்ச்சிகள்,ஒப்புக் கொள்ளும் அளவிற்கு திரு அருட்பா என்னும் நூலில் பதிவு செய்துள்ளார் வள்ளலார் .

    வள்ளலார் சமய மதங்களைப் பற்றி ஆயிரக்ககான பாடல்களிலும் உரை நடைப் பகுதிகளிலும் சாடிஉள்ளார்கள் .

    அதிலே பாடல் சில ;--

    கலை உரைத்தக் கற்பனையை நிலை எனக் கொண்டாடும்
    கண் மூடிப் பழக்கம் எல்லாம் மண் மூடிப் போக !

    என்றும்

    வேத நெறி ஆகமதத்தின் நெறி புராணங்கள்
    விளம்பு நெறி இதிகாசம் விதித்த நெறி முழுதும்
    ஓதுகின்ற சூது அனைத்தும் உளவு அனைத்தும் காட்டி
    உள்ளதனை உள்ளபடி உணர உணர்த்தினையே !

    அனைத்து பொய்யானது என்று தெளிவு படுத்தியுள்ளார் .

    கூறுகின்ற சமயம் எல்லாம் மதங்கள் எல்லாம் பிடித்துக்
    கூவுகின்றார் பலன் ஒன்றும் கொண்டார் இல்லை வீணே
    நீறு கின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர் போல்
    நீடுலகில் அழிந்து விட நினைத்தோனோ நிலைமேல்
    ஏறுகின்ற திறம் விழைந்தேன் ஏற்று வித்தாய் ஆங்கே!

    என்று பல்லாயிரம் பாடல்களில்,சமய மதங்களின் பொய்யான கற்பனைகளையும் .கதைகளையும் சொல்லி ,அவைகளை ஆழமான குழித் தோண்டி வெளியே வரமுடியாமல் மண்ணில் போட்டு மறைத்து விடுங்கள் என்று பறை சாற்றுகிறார் வள்ளலார் .

    இனிமேல் சமய மதங்களின் வேலைகள் பலிக்காது .மக்கள் விழித்துக் கொண்டார்கள் .மக்கள் அனைவரும் வள்ளலார் எழுதிய திரு அருட்பாவைப் பார்த்து படித்து உண்மையை உணர்ந்து பயன் பெறுவோம் .

    அன்புடன் ஆன்மநேயன் --கதிர்வேலு .

  • kathirvelu - 12 years ago

    உலகம் அமைதி பெற என்ன வழி ?

    உலகம் அமைதி பெற என்ன வழி ?
    ஆன்மநேய அன்புடையீர் வந்தனம்
    நாம் அனைவரும் ஏதோ ஒரு லாபத்தைத் தேடி அலைந்து கொண்டுதான் இருக்கிறோம்.அது உலகியலாக இருந்தாலும் சரி,அருளைப் பெறுவதாக இருந்தாலும் சரி,.அந்த லாபம் எது என்றால்..பணம் என்னும் பொருள்தான், உலகியலில வாழ வேண்டுமானால் பொருள் தேவைப்படுவதாகும்.,அந்த பொருள் எப்படிவரும்,பலபேருடன் சேர்ந்து வாழும் நாம் பலபேருடைய கூட்டு முயற்சியினால் உருவாககப்படுவதுதான் பொருள் என்று சொல்லப்படுகிறது..அந்த பொருளை நாம் சரிசமமாக பகிர்ந்து கொள்கிறோமா?என்றால் இல்லை ஏன் இந்த நிலை உருவானது.பொருள் எல்லோருக்கும் சமம்தானே!அப்படி இருக்க ஒருவரிடத்தில் அதிகமாகவும்.ஒருவரிடத்தில் குறைவாகவும்,ஒருவரிடத்தில் ஒன்றுமே இல்லாமலும் இருப்பதை நாம் காண்கிறோம்.ஆனால் இந்த உலகத்தில் அனைவரும் ஏதோ ஒரு காரிய காரணத்தை முன்னிட்டு ஏதோ ஒரு தொழில் செய்து கொண்டுதான் இருக்கிறோம் யாரும் சும்மா இருந்து விடவில்லை.அப்டி இருக்க இந்த பேதங்கள் வர காரணம் என்ன?காரியம் என்ன? சிந்திக்க வேண்டும் .
    இதற்கு அடிபடைக் காரணம் ஆன்மீகக் கொள்கைகள்தான் என்பது யாருக்கும் தெரியாததாகும் மக்களுக்கு தேவையான பொருள்களை தயாரிக்க தொழில்களைப் பிரித்தார்கள்,அதற்கு மனிதர்களை பிரித்தார்கள் அவர்கள் தொழிலுக்கு தகுந்தாற்போல் சாதிகளை பிறித்தார்கள்,தொழில் வளம் பெருகியது,பொருள் பரிமாற்றம் பகிர்ந்து கொள்ளப் பட்டது.அந்த பொருளை பெற்றுக் கொள்வதற்கு, [பரிமாற்றதிக்கு] பதிலாக தங்கம்,பணம்,என்ற நாணயம் தயாரிக்கப்பட்டது.அந்த நாணயம் என்னும் பணத்தைக் கொண்டு அவரவருக்கு வேண்டியப் பொருளை பரிமாற்றம் செய்து கொள்ளலாம், அந்த பணத்தைக் கொடுத்து அவரவர்கள் பொருளை பெற்றுக் கொள்ளலாம் என்ற சட்டம் உருவாக்கப்பட்டது,அந்த சட்டத்தை உருவாக்கியவர்கள்,அக்காலத்தில் இருந்த பெரியவர்கள் என்று சொல்லப்பட்ட ஆன்மீக வாதிகளாகும்,
    அப்படியே வளர்ந்து வந்த தொழில்களில் பணம் யாரிடம் அதிகம் இருந்ததோ அவர்கள் பணக்காரர்கள் எனப்பட்டனர்.பணம் யாரிடம் அதிகம் இருக்கிறதோ அவர்கள் உயர்ந்தவர்கள்.அவர்கள் உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்றும்,யாரிடம் பணம் குறைவாக இருந்ததோ அவர்கள் ஏழைகள், அவர்கள் கீழ் சாதிக்காரர்கள்.என்று மதிப்பிடப்பட்டது.அடுத்து பணமே இல்லாதவர்கள் மிகவும் நீழ் ஜாதிக்காரர்கள்,அவர்களை கீழ்த்தரமான வேலைகளை கொடுத்து ஒதுக்கி வைத்தார்கள்,அவர்களுக்கு ஊரை சுத்தம் செய்தல்,இறந்துபோன உயிர்களை அடக்கம் செய்தல்,ஊரில் உள்ள செய்திகளை மற்றவர்களுக்கு தண்டோரா மூலம தெரியப்படுத்துதல் போன்ற எடுபிடி வேலைகளையெல்லாம்,செய்ய சொல்லியதோடு அல்லாமல்,அவர்களை ஊருக்கு வெளியே குடி இருக்கவைத்தார்கள்,அவர்களை தீண்டதகாதவர்கள் என்று ஒதுக்கி வைத்தார்கள்.
    பணம்தான் மனிதனை பிரித்து !
    மனிதனாக பிறந்த அனைவரும் ஒன்று என்ற நிலை மாறி,மனிதனை மனிதன் பிரித்து வைத்தது எது ?பணம் என்னும் பொருள்தான் மனிதனை பிரித்து வைத்தது.
    இவற்றை எல்லாம் பிரித்தவர்கள் யார்?ஆன்மீகவாதிகள் என்று சொல்லப்பட்ட பெரியவர்கள் அல்லவா !
    அவர்கள் கற்றுத்தந்த ஆன்மீகம் இன்று வளர்ந்து மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்து விட்டன. மக்கள் கதிகலங்கி அவதிப்படுகிறார்கள்.அதுமட்டுமா உண்மைக்கு புறம்பான கற்பனைக் கதைகளை உலகம் முழுவதும் பரப்பி விட்டார்கள்.அந்த கற்பனைக் கதைகளை உண்மையென்று உண்மையாகவே நடந்துள்ளது போல் ஆலயங்களையும் புண்ணிய ஷேத்திரங்களையும் கட்டிவைத்த உள்ளார்கள் அதில் பொய்யான தத்துவ உருவங்களை சிலைகளாக அதாவது கடவுள்களாக வைத்து வழிபாடு செய்ய வைத்தார்கள்,அவைகள் மக்கள் மனதில் ஆழமாக வேர் ஊன்றி பதிந்து விட்டது .
    கடவுளுக்கு கை கால மூக்கு வாய் கண் உடம்பு இருக்குமா என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கிறார்கள் .கடவுளுக்கு பணம் கொடுத்து அருளைப் பெற முடியுமா ?அப்படியானால் அந்தக் கடவுள் வியாபாரியா ?என்று கேட்பவர்களுக்கு என்ன பதில் சொல்லமுடியும் .இப்படி கடவுளை அசிங்கப் படுத்தி விட்டார்கள் .பணம் கடவுளையும் மனிதனையும் பிரித்து வைத்து விட்டது .இவைகள் எல்லாம் யாருடைய வேலை ,உண்மையான கடவுளை மறைத்தவன் யார் ?அவனைக் கண்டு பிடித்து மக்கள் மத்தியில் நிறுத்த வேண்டும் இல்லையா?இதை யார் செய்வது ?
    இதை வள்ளலார் தான் உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார் !
    கடவுள் பெயரைச சொல்லி ஏமாற்றும் கூட்டம் இன்று அதிகமாகி விட்டது.அதனால் மக்கள் மூட நம்பிக்கையில்,பணத்தை பறிகொடுத்து கவலைப் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.இவை இந்தியாமட்டும் அல்ல உலகம் முழுவதும் நடந்து கொண்டு உள்ளது .இதை மாற்ற என்ன வழி ! என்று தெரியாமல் உலகமே திணறிக் கொண்டு உள்ளது.
    சாதி மதம் சமயம் என்று வைத்துக் கொண்டு மத ஒற்றுமை வேண்டும், மத நல்லிணக்கம் வேண்டும்.என்று வாய் கிழிய பேசினால் தீர்ந்து விடுமா? ஒற்றுமை வந்து விடுமா?எக்காலத்திலும் வாராது தீராது.எத்த

  • kathirvelu - 12 years ago

    ஊழலை ஒழிப்பது எப்படி ?
    ஊழலை ஒழிப்பது எப்படி ?

    நாம் வாழும் இவ்வுலகம் அனைவரும் வாழ வழி வகுத்து தந்துள்ளது.உலகில் உள்ள பொருட்கள் அனைவருக்கும் சொந்தமானதாகும்,அப்படி இருக்க ஒருவரிடத்தில் அதிகப் பொருட்களும் ஒருவரிடத்தில் குறைந்த பொருள்களும் ஒருவரிடத்தில் பொருள்களே இல்லாமலும் வாழும் வகை எப்படி வந்தது,

    ஏழைப் ,பணக்காரன் ,உயர்ந்தவன், தாழ்ந்தவன் எத்தனை சாதி, சமயம், மதங்கள் சாத்திரங்கள் என்ற நிலைப்பாடு ஏன் வந்தது.இதை சரி செய்ய முடியாமல் உலகமே தவித்துக் கொண்டு இருக்க என்ன காரணம் .இதற்காக எத்தனை சட்ட திட்டங்கள் ,எத்தனை ஆட்சியாளர்கள் ,எத்தனை எத்தனை அதிகாரிகள் ,எத்தனை பாது காவலர்கள் ,எத்தனை நீதி மன்றங்கள் ,எத்தனை எல்லைப் பாது காப்புகள் .மனிதனை மனிதன் அழித்து வாழும் வாழ்க்கையை பார்க்கும் போது, மிகவும் கொடூரமான மிருகத்தை விட கேவலமாக உள்ளது.

    இதனால் மனித உயிர்கள் பேய் பிடித்த குரங்கு விளையாட்டுகள் போல் சிறு பிள்ளை விளையாட்டுத் தனமாக பல பேத முற்று,வெளிநாட்டிலும்,உள் நாட்டிலும் போரிட்டு அழிந்து கொண்டு இருக்கிறார்கள்.இப்படி வீண் போகாமல் பாது காக்க வேண்டுமானால் எனக்குத் தெரிந்த சில வழிகளை சொல்லுகிறேன் இவை முடிவு அல்ல அறிவாளிகளின் சிந்தனைக்கு

    இவ்வுலகில் வாழும் மனிதர்களுக்கு உண்ண உணவு ,உடுக்க உடை ,இருக்க இடம் என்ற வீடு ,இவை அனைவருக்கும் போதுமானது ,சரி உலகில் மனிதர்களால் உற்பத்தியாகும் பொருட்கள் அனைத்தும் இறைவன் படைத்த இவ்வுலகத்தில் தான் கிடைக்கின்றன,இதை பகிர்ந்து கொண்டு வாழாமல் வாழ்ந்து வருவது அனைவரும் அறிந்த உண்மையாகும் இவற்றை எப்படி சரி செய்வது என்பதைப் பார்ப்போம் ,

    அரசாங்கம் செய்யும் கடமை என்ன ?
    உழைப்பில் வித்தியாசம் இருக்கலாம் ஊதியத்தில் வித்தியாசம் இருக்க கூடாது .

    நம் நாட்டில் படித்தவர் படிக்காதவர் என்ற இரு பிரிவுகளை அரசாங்கம் பிரித்து அனைவருக்கும் வேலை என்பதை உறுதிப் படுத்த வேண்டும் உழைக்கும்.வேலைகளில் வேறுபாடுகள் இருக்கலாம் வித்தியாசம் இருக்கலாம் .ஊதியத்தில் அதாவது சம்பளத்தில் வித்தியாசம் இருக்கக் கூடாது,கக்கூஸ் எடுப்பவர் முதல் கலைக்டர் வரையிலும்.ஆண்டி முதல் அரசாட்சி செய்பவர் வரையிலும், அனைவருக்கும் வருமானம் சமமாக இருக்க வேண்டும் ,அப்படி பகிர்ந்து கொண்டால் உலகில் உள்ள மக்கள் அனைவரும் துன்பம் ,துயரம் ,அச்சம் ,பயம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழலாம் .,.

    வாரிசுகளுக்கு சொத்து உரிமை என்பது கூடாது !

    ஒரு குடும்பத்தில் ஆண் பெண் அதாவது கணவன் மனைவி திருமணம் செய்து குழந்தை பிறந்தால் அவர்களை படிக்க வைக்கவும் ,அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கவும் வரைதான் தாய் தந்தையர்களின் கடமையாக இருக்க வேண்டும் .தாய் தந்தையர்கள் சொத்தில் பெற்றக் குழந்தைகளுக்கு உரிமைக் கிடையாது அவர்கள் மரணம் அடையும் வரை அவர்கள் சம்பாதித்த சொத்தை அனுபவித்து பின் அவர்கள் சொத்தை அரசாங்கத்திடம் கொடுத்து விட வேண்டும் .அரசாங்கம் எடுத்துக் கொள்ள வேண்டும் .இவை அனைவருக்கும் பொதுவானதாகும் .

    இதன் படி அரசாங்கம் செயல் பட்டால் ஊழல் செய்வதற்கு வாய்ப்பே இல்லை அவசியமும் இல்லை .எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் நிலை உருவாகும் ...
    இதைத்தான் வள்ளலார் சொல்லுகிறார் ;--

    ஒருமையில் உலகெலாம் ஓங்குக என்றார் .ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளராகி உலகியல் நடத்த வேண்டும் என்றார்.
    உயிரெலாம் உலம்பட நோக்குக என்றார் உயிருள யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர் நலம் பரவுக என்றார் .

    இதை யார் செய்வது ;-- பற்று இல்லாத பொது நோக்கம் உள்ளவர்கள் நடு நிலை உள்ளவர்கள், இறைவன் திரு அருளைப் பெற்றவர்கள் அதாவது அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க !தெருன் நயந்த நல்லோர் நினைத்த நலம் பெருக என்றார் ஒன்றே குலம் ஒருவனே தேவன என்ற உணர்வை அனைவரிடத்திலும் பதிய செய்ய வேண்டும் ,ஊழலால சம்பாதிக்கும் பொருள் எந்த உயிர்களையும் காப்பாற்றப் போவதில்லை,என்பதை உணரவேண்டும் ..

    ஊழலை ஒழிக்கவும் அனைவரும் சரி சமமாக வாழ்வும் ஒற்றுமையுடன் வாழவும் பேராசையை ஒழிக்கவும் இதுவே வழியாகும் என்பதை உங்கள் முன் வைக்கிறேன் .சிந்திப்போம் செயல்படுவோம் .

    கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

    அன்புடன் ஆன்மநேயன் ;--கதிர்வேலு.

  • kathirvelu - 12 years ago

    நல்ல ஆட்சி அமைய வேண்டும் !
    நல்ல ஆட்சி அமைய வேண்டும் !

    உலகம் முழுவதும் நல்ல ஆட்சி அமைய வேண்டுமானால் மக்கள் நலமுடன் வாழ வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் .

    உலகில் உள்ள மதங்களையும் மதக கொள்கைகளையும் அப்புறப் படுத்தவேண்டும் சமயங்களையும் ,சமயக் கொள்கைகளையும் அப்புறப் படுத்த வேண்டும் ,சாதிகளையும் சாதிக் கொள்கைகளையும் அப்புறப் படுத்த வேண்டும் கடவுள் கொள்கை உலகம் முழுவதும் ஒரே தனமையுடன் இருக்கவேண்டும் அனைத்து உலகத்திற்கும் ஒரே கடவுள் என்ற ஒளி வழிபாட்டு முறையைக் கொண்டு வரவேண்டும் .

    ஆலயம் ,மசூதி,சர்ச்சு ,கோவில் .பிரமீடு முதலிய அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் உருவ வழிபாட்டை அகற்றி ,அனைவருக்கும் பொதுவான ஒளி வழிபாட்டு முறையைக் கொண்டு வரவேண்டும் .

    ஆட்சி முறையை மாற்றி உலகம் முழுவதும் ஒரு குடைக் கீழ் கொண்டு வரவேண்டும் கடவுள் தரகர் குரு அர்ச்சகர் அரசர்,மந்திரி போன்ற எந்த வேறு பாடுகளும் இருக்க கூடாது.கடவுள் ஒருவர்தான் அனைவருக்கும் குருவாக இருக்க வேண்டும்

    தாவர உணவு தவிர எந்த உயிர் இனங்களையும் உணவாக கொள்ளக் கூடாது..அனைத்து உயிர்களிலும் ஆன்மா என்ற உயிர் ஒளி இருப்பதால் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை கடை பிடிக்க வேண்டும்

    உலகம் முழுவதும் ஒரே சமச்சீர் கல்வி முறையைக் கொண்டு வரவேண்டும் .அனைவருக்கும் வேலை வாய்ப்பு கொண்டு வரவேண்டும் .அனைவருக்கும் சமமான ஊதியம் வழங்க வேண்டும் .வேளையில் வித்தியாசம் இருக்கலாம் ஊதியத்தில் வித்தியாசம் இருக்கக் கூடாது.

    உலகில் அனைத்து தொழில் வளம் பெருக வேண்டும் .பசுமைப் புரட்சி செய்து அனைவருக்கும் உணவு பற்றாக் குறை இல்லாமல் சமமாக பகிர்ந்து வழங்க வேண்டும் .நோய் இல்லாமல் வாழ்வதற்கு சுகாதார வளத்தை மேம்படுத்த வேண்டும் .உலகில் உள்ள அனைத்து நிலங்களையும் அரசு உடமையாக்க வேண்டும் அனைத்து தொழில்களும் அரசின் மேற்ப பார்வையில் செயல்பட வேண்டும் .சேமிப்பு வைப்பு நிதி என்ற பெயரில் யாரும் பணத்தை சேமித்து வைக்க கூடாது.பணத் தேவையை ஒழித்து பொருள் தேவையை உண்டாக்க வேண்டும் .

    எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் .பேதம் அற்ற நிலை உடைய மக்களையும் பேதம் அற்ற தன்மை உடைய மக்களையும் கொண்ட ஒரு நல்ல ஆட்சி அமைய வேண்டும் .

    இவை எல்லாம் நடந்தால் உலகில் உள்ள தீவிர வாதம்,பயங்கர வாதம் .நக்சல்பார்ட்டி,கொலை, கொள்ளை,லஞ்சம்,ஊழல் கற்பழிப்பு ,ஏமாற்றுதல் ,உயர்ந்தோர் ,தாழ்ந்தோர் ,ஏழை ,பணக்காரன்,சாதி ,சமயம் ,மதம் இனம் ,போன்ற கொடுமையான செயல்கள் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் ஒழிந்துவிடும்

    இவற்றை எல்லாம் யார் செய்வது !அனைத்து உயிர்களிடத்தும் அன்பு தயவு கருணை உடைய பொது நலமே வாழ்க்கை என்னும் அருள் நயந்த சன்மார்க்கர் என்னும் நன்மார்க்கர் ஆட்சி புரிய வேண்டும் இவை எல்லாம் நான் சொல்ல வில்லை கருணையே வடிவமான அருட்பிரகாச வள்ளல என்னும் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் சொல்லியதாகும் .ஆண்டவர் நினைத்தால் அனைத்தும் நடக்கும் .

    கொல்லா நெறியே குவலயம் ஓங்குக !
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

    அன்புடன் ஆன்மநேயன் '=கதிர்வேலு .

  • kathirvelu - 12 years ago

    சந்தைப் படிப்பு எது ! சொந்தப் படிப்பு எது ?

    மனிதனை திருத்த உலகில் எத்தனை நூல்கள்!

    உலகம் தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரை மனிதரகளை திருத்த எண்ணில் அடங்காத அறிவு நூல்கள் எழுதி வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள் .இன்று வரை மக்கள் திருந்தியதாக தெரியவில்லை .ஏன் ?எழுதியவர்கள் குற்றமா ?எழுதிய கருத்துக்கள் குற்றமா ?மக்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லையா?அவற்றை ஏற்றுக் கொள்ளும் அளவிர்க்கு மக்களுக்கு தெளிவு இல்லையா ? ஒண்ணுமே புரியவில்லை .உண்மையிலே மக்கள் மீது அக்கறை உள்ளவர்கள் யாரோ சொல்லியதை யாரோ எழுதி வைத்தியதை பார்த்து படித்து பதிய வைத்ததையே வாந்தி எடுத்துக் கொண்டு உள்ளார்கள் .

    அதனால் மக்கள் மனதையும் அறிவையும் மாற்ற முடிய வில்லை ஏன் என்றால் இவர்கள் சொல்லிய கருத்துக்கள் யாவும் அவர்களுக்கும் தெரியும் இந்த உலகத்தில் இல்லாத எந்த கருத்துகளும் புதியவை அல்ல அரைத்தையே அரைத்துக் கொண்டு உள்ளார்கள் .ஒரே கருத்து வேறு வேறு கோணங்களில் மக்களுக்கு பதிவு செய்கிறார்கள் .அதனால் மக்களை நல்வழிப் படுத்தும் உண்மையான கருத்துக்கள் சொல்லும் தகுதி யாருக்கும் இல்லை .

    மக்கள் சமுதாயத்திற்கு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று முதன் முதலில் அறிவு நுல் எழுதி வைத்து இப்படித்தான் வாழ வேண்டும் என்று பதிவு செய்து வைத்தார்களே !அவர்கள் செய்த அறியாமை களாகும் .அவர்கள் உண்மையைச சொல்லி இருந்தால் மக்களும் உண்மையை அறிந்து அதன்படி வாழ்ந்திருப்பார்கள் .உண்மையை மறைத்து குழித் தோண்டி புதைத்து விட்டார்கள் .

    அதற்கு பின்னாடி வந்த பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டவர்களும் ,முத்தர்களும் சித்தர்களும் யோகிகளும் ஞானிகளும் முன்னுக்கு பின் முரணாகவே சொல்லி வைத்து விட்டார்கள் .அவர்களை பின் பற்றி வந்த மனிதர்கள் அவரவர் பின் பற்றும் கருத்துகள் தான உயர்ந்தது என்றும் உண்மை எது என்று தெரியாமல் புரியாமல் அறியாமல் போட்டிப் பொறாமை பேதம் கொண்டு அழிந்து கொண்டு உள்ளார்கள்

    அன்று முதல் இன்று வரை இதுதான் நடந்து கொண்டு வருகின்றன.இனி மக்கள் என்ன செய்ய வேண்டும் .எல்லா மனிதர்களுக்கும் இந்திரியம் கரணம் ஜீவன் ஆன்மா என்னும் அமைப்புகள் மனிதனுடைய உடம்பில் வைக்கப் பட்டு உள்ளன,இவற்றை படிப்பால் அறிய வேண்டியது இல்லை எல்லாம் இறைவனால் கொடுக்கப் பட்டது

    இவற்றை அறிந்து கொள்ள ஒழுக்கம் தான் தேவைப் படுகிறது அந்த ஒழுக்கம் எது என்றால் இந்திரிய ஒழுக்கம்,காரண ஒழுக்கம் ஜீவ ஒழுக்கம்,ஆன்ம ஒழுக்கம் .என்பதாகும் .இந்த ஒழுக்கம் தெரிந்து கொள்ள அனைத்து உயிர்களிடத்தும் அன்பு, தயவு, கருணை என்னும் இரக்கத்தை வர வழைத்துக் கொள்ள வேண்டும் .அப்படி வர வழைத்துக் கொள்ள படிப்பு அறிவு தேவை இல்லை ,

    கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
    காணார்க்கும் கண்டவர்க்கும் கண் அளிக்கும் கண்ணே
    வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே
    மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியே
    நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே
    நரர் களுக்கும் சுரர் களுக்கும் நலம் கொடுக்கும் நலமே
    எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற சிவமே
    என் அரசே யான் புகலும் இசையும் அணிந்து அருளே !

    அன்பு உண்டானால் அறிவு உண்டாகும் அறிவு உண்டானால் அருள் உண்டாகும் அருள் உண்டானால் அனைத்து உண்மைகளும் தன்னைத் தானே தெரியவரும் .அப்போது மனிதன் மனிதனாக வாழ்ந்து கடவுள் நிலை அறிந்து அம் மயமாகலாம் இதுவே இறை நிலையை அடையும் உண்மையான வழியாகும்

    அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுது அங்கு
    அனுபவமாகின்றது
    செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
    திருவருள் உருவம்

    அதனால் அருளைப் படிப்பால் அறிய வேண்டியது இல்லை உலகியல் படிப்பு சந்தைப் படிப்பு ,நம் சொந்தப் படிப்பு ஒழுக்கம் தான் என்பதை உணர்ந்து உண்மையை அறிந்து உயர்ந்த நிலையை அடைவோம் .

    ஒரு உண்மைப் பாடல் ;--

    கண்டது எல்லாம் அநித்தியமே கேட்டது எல்லாம் பழுதே
    கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே
    உண்டது எல்லாம் மலமே உட் கொண்டது எல்லாம் குறையே
    உலகிலீர் இது வரையில் உண்மை அறிந்திலிரே
    விண்டதினால் என் இனி நீர் சமரச சன்மார்க்க
    மெய் நெறியைக் கடைப் பிடித்து மெய்ப் பொருளை நன்கு உணர்ந்து
    எண்டகு சிற்றம் அமபலத்தே என் தந்தை அருள் அடைமின்
    இறவாத வரம் பெறலாம் இன்பம் உறலாமே !

    உங்கள் அன்புள்ள ஆன்மநேயன் ;--கதிர்வேலு .

  • kathirvelu - 12 years ago

    உலகம் என் வசம இருந்தால் !

    உலகம் என் வசம இருந்தால் !

    1) சாதி ,சமயம் .மதம் .என்ற கொள்கைகளையும் ,கோட்பாடுகளையும் .மக்கள் மனதில் இருந்து எடுத்து விடுவேன் .அதை விளக்கும் நூல்களை அதாவது புத்தகங்களை மண்ணைப் போட்டு மறைத்து விடுவேன் .

    2) கடவுள் ஒருவரே அவர் ஒளியாக உள்ளார் அவர்தான் இந்த உலகத்தை இயக்கக் கொண்டு உள்ளார் என்பதை உலகுக்கு தெரியப் படுத்துவேன் .

    3) உலகில் உள்ள ஆலயங்கள் .மசூதிகள் .சர்ச்சுகள் .போன்ற இறைவன் வழிபாட்டுத் தளங்கள் அனைத்திலும் ,உருவ வழிபாட்டை அப்புறப் படுத்தி ஒளி வழி பாட்டை அமல் படுத்துவேன் .

    4) உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் இறைவன் வாழும் ஆலயம் என்பதை உணர்த்தி உயிர்க் கொலையும் புலால் உண்ணாமல் இருக்கவும் மக்களுக்கு தெளிவுப் படுத்துவேன் .

    5) மக்கள் நலமுடன் வாழ்வதற்கு உணவு முக்கியம் என்பதை தெளிவுப் படுத்தி பசுமைப் புரட்ச்சி செய்து விவசாயம் தன்னிறைவு அடையச செய்வேன்

    6) காடு ,வனம,மலை மற்றும் ,ஆடு,மாடு,போன்ற கால் நடைகள் முதலியவைகளை அழிக்காமல் அதனால் வரும் கழிவுப் பொருள்களை பயன் படுத்தி இயற்கை உரங்கள் தயாரித்து விவசாயத்திற்கு பயன் படுத்துவேன் .

    7}மனிதன் மனிதனாக வாழ்வதற்கு சந்தைப் படிப்பை அகற்றி ,நம் சொந்தப் படிப்பான சாகாக் கல்வியை மக்களுக்கு போதிக்க செய்வேன் .

    8) அனைத்து மக்களுக்கும் உண்ண உணவு ,உடுக்க உடை ,இருக்க இடம் அதாவது வீடு .சரி சமமாக வாழ்வதற்கு வகை செய்வேன் .

    9) பஞ்சம் .பட்டினி ,வறுமை, ஏற்றத் தாழ்வு ,உயர்ந்தோர் ,தாழ்ந்தோர் .ஏழை ,பணக்காரன் என்ற கொடுமையான அரக்கனை இருக்கும் இடம் தெரியாமல் அழித்து விடுவேன் .

    10) எல்லோருக்கும் வேலை எல்லோருக்கும் சமமான ஊதியம் அதாவது சம்பளம் வழங்குவேன் .வேளைகளில்அதாவது உழைப்பில் வித்தியாசம் இருக்கலாம் ஊதியத்தில் வித்தியாசம் இல்லாமல் இருக்க வழி செய்வேன்

    11}மதுக் கடைக்களும்,மாமிசக் கடைகளும் உலகில் எங்கும் இல்லாமல் செய்து மக்களுக்கு உணர்த்தி மக்களை நல்வழிப் படுத்துவேன் .

    12)காவல்துறை ,எல்லைப் பாதுகாப்பு,ராணுவம்,தனி மனித பாதுகாப்பு,நீதி மன்றங்கள் எதுவும் மக்களுக்கு தேவையற்றது என்பதை உறுதி செய்வேன் .குற்றம் செய்யாத மனித சமுதாயத்தை உருவாக்குவேன்

    13) மக்களை அழிக்கும் ஆணு ஆயுதம் ஆணு குண்டு,போர்ப் படை,அதிகார துஷ்பிரயோகம் போன்ற கொடுமையான தீய சக்திகளை நாட்டை விட்டு விளக்கி விடுவேன் .

    14) கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்கக் கூடாது.வேறு திருமணம் செய்துக் கொள்ளக் கூடாது.அதேபோல் மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்யக் கூடாது என்பதை உணர்வு பூர்வமாக உணர வைப்பேன்.

    15) மக்களுக்கு இயற்கை மரணம் வரவேண்டுமே ஒழிய செயற்கை மரணம் வரக்கூடாது என்பதை பாதுகாப்பேன்.மரணம் வந்தால் உடலை புதைக்க வேண்டுமே தவிர எரிக்க கூடாது என்பதை அறிவியல் ரீதியாக உணர்த்துவேன் .

    16) உலகம் இப்போது வெப்பமயமாகிக் கொண்டு இருப்பதற்கு காரணம் பிணத்தை எரிப்பதும் ஒரு காரணமாகும் .வாயில்லாத ஜீவன்களாகிய ஆடு மாடு ,பன்றி,கோழி ,மீன்கள் போன்ற உயிர்களை கொலை செய்வதால் ,உயிர்களில் இருந்து வரும் உயிர் ஆற்றல் என்னும் மின் காந்த சக்திதான் வெளியே வந்து அனுக்களோடு கலந்து வெப்பமாகிறது .அதனால் உயிர்க் கொலை செய்யாமல் உலகைப் பாது காப்பேன.

    17}உலகியல் கல்வியான சாகும் கல்வியை எடுத்துவிட்டு காகாக் கல்வியான அருள் கல்வியை அனைவருக்கும் போதிக்க வழி செய்வேன் .

    18} அரசியல் என்ற கொள்கையை குழியைத் தோண்டி புதைத்து விடுவேன் .நாட்டை பாது காக்க அருள் கல்வியில் தேர்ச்சிப் பெற்றவர்களை நாட்டை ஆளும் உரிமையை வழங்குவேன் .அவர்களுக்கு அருள் நயந்த நன்மார்க்கர்கள் என்ற பட்டத்தை கொடுத்து வரிசைகரமாக ஆட்சி பீடத்தில் அமர்த்துவேன் .

    19}உலகில் உள்ள மனித தேகம் படைத்தவர்களை மரணம் அடையாமல் ஒளி தேகமான அருள் தேகம் பெற்று ,மெய்ப் பொருளான அருட்பெரும் ஜோதி ஆண்டவர் இருக்கும் இடத்திற்கு ஒவ்வொருவராக அனுப்பி வைப்பேன் .ஏன் என்றால் அனைவரும் அங்கு இருந்து தான் வந்தவர்களாகும் .வந்த இடத்திற்கு அனுப்பி வைப்பதுதான இயற்கை சட்டமாகும் .அந்த சட்டத்தை முழுமையாக்கப் பாடுபடுவேன் .

    20} உலக உண்மைகளையும் உலகம் எப்படி படைக்கப் பட்டது ,உயிர்கள் எங்கு இருந்து வந்தன உயிர்த் தோற்றங்கள் எப்படி உருவானது ஏன் உருவானது ஏன் அழிகின்றது ,அழியாமல் அதாவது மரணம் அடையாமல் இருக்க என்ன வழி என்பதை சாகாக் கல்வியின் மூலம கற்பித்து அனைவரையும் மெய்ப் பொருளை அடையச செய்வேன்

    21}உலகில் உள்ள அணுக்கள் எத்தனை வகைகள் அவைகளின் வேலைகள் என்ன ?அதன் சேர்க்கைகள் எப்படி நடை பெறுகிறது ,என்ன என்ன அணுக்கள் சேர்ந்து உருவங்களை உருவாக்குகிறது ,உயிருள்ள அணுக்கள் ,உயிர் இல்லாத அணுக்கள் ,அதன் தோற்றங்கள் மாற்றங்கள் அனைத்தையும் .அறிவியல் விஞ்ஞானம் .உளவியல் அருளியல், மூலம அறிய உலக அளவில் பல்கலைக் கழகங்கள் அமைத்து

  • kathirvelu - 12 years ago

    ஏமாற்று பேர் வழிகள் !

    ஏமாற்று பேர் வழிகள் !

    வள்ளலார் வழியைப் பின் பற்றி வந்தவர்கள் எல்லாம் பகுத்தறிவு வாதிகள் என்பது உண்மையாகும் .

    நம் தமிழ் நாட்டில் ,பாரதியார் ,பாரதிதாசன் ,போன்றவர்களும் பெரியாரின் பகுத்தறிவும் அண்ணாவின் உலக அறிவும் இரண்டையும் சேர்ந்த பொது அறிவுக்கு இரைபோடும் முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களும் மற்றும் உள்ள பகுத்தறிவு சிந்தனையாளர்களும் வள்ளலார் காட்டிய பாதை என்பதை மறைத்து அவர்கள் சொல்லியது போல மக்களிடம் போதித்து உள்ளார்கள் என்பது யாரும் மறுக்க முடியாது மறைக்கவும் முடியாது .

    எது எப்படியார் சொல்லி இருந்தாலும் மக்களுக்கு அறிவு தெளிவு ஏற்பட்டால் போதுமானதாகும் .

    இந்த உலகம் அறியாமையில் சாதி ,சமயம் மதம் என்ற பொய்யான கற்பனைக் கதைகளை உண்மை என்று நம்பி வாழ்ந்து அழிந்துக் கொண்டு இருந்த மனித சமுதாயத்தை திருத்துவதற்கு வந்தவர்தான் வள்ளலார் என்பவராகும் .ஆன்மீகம் என்ற பகுத்தறிவுக கொள்கையின் மூலம் மக்களை திருத்த வேண்டும் என்பதுதான் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கை களாகும், அவரை இறைவனே அனுப்பி வைத்தார் என்பது அவர் எழுதிய அருட்பாவில் பதிவு செய்துள்ளார்.அதில் சந்தேகம் எதுவும் இல்லை .

    வள்ளலார் கொள்கைகளை பின் பற்றும் சன்மார்க்க சங்கத்தை சார்ந்த சன்மார்க்கர்கள் கண்ட உண்மையாகும்

    ஆனால் இன்று சமுதாயத்தில் என்ன நடந்து கொண்டு உள்ளது .

    ஆன்மிகம் என்ற பெயரில் கடவுள் பெயரை கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றும் காவி உடை சாமியார்களும், துறவி, சந்நியாசி என்ற ஏமாற்றுப் பேர்வழிகளுக்கும் மற்றும் வேறு பல வழிகளில் போலி சாமியார்களும், புற்று ஈசல் போல் நாட்டில் பரவிக் கொண்டு வருகிறார்கள். மக்களும் அதை உண்மை என்று நம்பி ஏமாந்து வீண் போய்க் கொண்டு இருக்கிறார்கள்.

    இதற்கு அடிப்படைக காரணம் பேராசையே. ஆசையே அழிவிற்கு காரணம் என்ற உண்மையை உணராத மக்கள் பொய்யை உண்மை என்று நம்பி ஏமாந்து அழிந்து போய்க் கொண்டே இருக்கிறார்கள்.

    ஏமாற்றுக்காரர்கள் முதலில் - அரசியல் வாதிகளையும், உயர் அதிகாரிகளையும், பெரும் பணக்காரர்களையும் அழைத்து அவர்கள் தலைமையில், யோகம், தவம், தியானம், மந்திரம் தந்திரம் அபிஷேகம், ஆராதனை, வழிபாடு போன்றவற்றை நடத்தி நம்பவைத்து ஏமாற்று வேலையை ஆரம்பிக்கிறார்கள்.

    அதைப் பார்த்த மற்ற சமூகத்தில் உள்ள பெரியவர்களும், திரைத்துறையை சார்ந்த பிரபல நடிகர்களும் நடிகைளும் மற்றும் மக்கள் மத்தியில் அறிமுகமான தொழில் அதிபர்களும் மற்றும் பலரும் போக ஆரம்பித்,து விடுகிறார்கள்.

    பெரிய, பெரிய ஆட்களே நம்பித் தானே போகிறார்கள் நாமும் போகலாம் என்ற ஆசைகள் மக்கள் மன்தில் தோன்றிவிடுகிறது. அதன் அடிப்படையில் நடுத்தர மக்கள் ஏமாந்து வீண் போக ஆரம்பித்து விடுகிறார்கள். கூட்டம் சேர்ந்து விடுகிறது. ஏமாற்றுக்காரர்களுக்கு வேட்டையாட வசதியாகி விடுகிறது. பணம் பறிக்கும் வேலையை மிக சுலபமாக ஆரம்பித்து விடுகிறார்கள்.

    ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களுக்கு கவலையே இல்லாமல் போய் விடுகிறது.

    சில பல போலி சாமியாகள் மாட்டிக்கொண்டாலும் மக்கள் திருந்துவதாக இல்லை. திருந்தவே மாட்டார்கள். சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருந்தாலும் திட்டம் போட்டு திருடர கூட்டம் திருடிக்கொண்டே தான் இருக்கிறார்கள்.

    இதற்க்கு ஒரு குறிப்பிட்ட அரசியல் வாதியல்களும் அரசியல் தலைவர்களும் பெரும் பணக்காரர்களும், அரை குறை ஆன்மிக வாதிகளும் உடந்தையாக இருந்துகொண்டே தான் இருக்கிறார்கள்.

    மாயைக்கும் கடவுளுக்கும் வித்தியாசம் என்ன என்பதே தெரியாத ஆன்மிக வாதிகள் எல்லா மதத்திலும் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

    இவ்வுலகை கடவுள் படைத்தாலும் கடவுளை இவர்களால் படைக்க முடியுமா? மனிதர்களால் கடவுளை படைக்க முடியாது என்பது உண்மை.

    கடவுள் இவ்வுலகை படைத்தாலும் கடவுள் கட்டுப்பாட்டில் இவ்வுலகம் கிடையாது. பஞ்சம் பூதங்களான மாயையின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. இதை தெரியாத ஆன்மிக வாதிகளும் மக்களும் மாயா உருவங்களை கடவுள் என்றும் தத்துவங்களை கடவுள் என்றும் மனிதர்களை கடவுள் என்றும் நம்பி வீண் போய் கொண்டு இருக்கிறார்கள்.

    இதனுடைய உண்மை இரகசியங்களை வள்ளலார் திரு அருட்பா நூலில் தெளிவாக எழுதி வைத்துள்ளார் வள்ளலாரைத் தவிர வேறு எந்த ஞானிகளுக்கும் தெரியாது என்றே சொல்ல முடியும்.

    அதனால் தான் கோயில் ஆலயம், சர்ச் மசூதி, பிரமீடு போன்ற சமய மதங்களில் உள்ளது போல் அமைக்காமல் ஜாதி மதம் சமயம் ஆசாரங்கள் அற்ற எல்லோருக்கும் பொதுவாகிய உருவ வழிபாடு அற்ற சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை வடலூரில் 1872 -ஆம் ஆண்டு தோற்றி வைத்துள்ளார். ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றார். அதற்காக வடலூரில் சத்திய தருமச் சாலையை 1867 -ல் துவங்கிவைத்துள்ளார். இன்று வரை ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய அன்னதானம் நடைபெற்றுக்கொ

  • kathirvelu - 12 years ago

    கொலை செய்யாதீர்கள் புலால் உண்ணாதீர்கள் !

    கொலை செய்யாதீர்கள் புலால் உண்ணாதீர்கள் !

    ஆனமநேய அன்புடைய அனைவருக்கும் வணக்கம் இந்த உலகம் துன்பமும் துயரமும் அச்சமும் பயமும் அடைவதற்கு முக்கிய காரணம் வாயில்லாத உயிர்களைக் கொன்று தினபது தான் என்பது ,புலால் உண்பவர்கள் அறியாத உண்மையாகும்,மாதம் ஒருநாள் வாரம் ஒருநாள் தினமும் தின்பது, எல்லாம் தவறான பழக்கமாகும் உயிரின் உண்மை ,அதன் தன்மை அதன் ஆற்றல் என்ன என்பது தெரியாமல் பழக்கத்தின் காரணமாகவும் நாக்கு ருசியின் காரணமாகவும் கடவுளின் வேண்டுதல் காரணமாகவும் புலால் உண்கிறார்கள் இவை யாவும் அறியாமையாகும் மனித அறிவுக்கு குறைவான செயலாகும்

    எல்லா உயிர்களும் இறைவன் படைப்பு ,இறைவன் குடி இருக்கும் ஆலயம் என்பதை என்பதை அறிவு மூலமாக உணர வேண்டும் அதுவே பகுத்தறிவாகும்,பகுத்தறிவு என்று பேசுபவர்களும்,இவற்றை அறியாமல் தவறு செய்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களை பகுத்தறிவு என்று சொல்ல முடியாது .

    கடவுளை வணங்கும் வழிபாடு செய்யும் பக்தியில் உள்ளவர்களும் .ஒரு சில நாட்கள் தவிர மற்ற நாட்களில் புலால் உண்கிறார்கள் .கடவுள் அவர்களை ஏற்றுக் கொள்வார்களா என்றால் ஏற்றுக் கொள்ள மாட்டார் அவர்களும் அறியாமையால் மூட பழக்க வழக்கத்தால் புலால் உண்கிறார்கள் அவர்களை பக்தியாளர்கள் என்று சொல்வது நியாயமாகாது .அதேபோல் எல்லா மதத்தார்களும்,சமய வாதிகளும் அதே தவறையும் ,குற்றங்களையும் செய்து வருகிறார்கள்

    யோகம ,தவம தியானம் செய்யும் ஆன்மீக வாதிகளும் உயிர்களின் உண்மை தெரியாமல் புலால் உண்டுக் கொண்டு செய்கிறார்கள் தியானம் தவம யோகம அவர்களுக்கு கை கூடுமா ,மனம் அடங்குமா என்றால் உண்மையாக எதுவும் நடக்காது அவர்களை அவர்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்

    ஒரு உயிரை உண்டாக்குவதற்கு கடவுளைத் தவிர மனிதர்களால் முடியாது, முடியாததை அழிக்க யாருக்கும் உரிமை இல்லை எனபது இயற்கையின் கட்டளையாகும் ,சட்டமாகும்

    எவ்வளவு செல்வம் இருந்தாலும் பட்டம் பதவிகள் இருந்தாலும்.அவனுக்கும் உயிர்மேல் அளவுகடந்த ஆசையும் பற்றுதலும் வருகிறது.உயிரைக் காப்பாற்ற அத்தனை செல்வங்களையும் இழக்க தயாராகிறார்கள் .அந்த உயிரின் தன்மையும் பெருமையும் மகத்துவத்தையும் எப்படி சொல்லமுடியும்.உயிர் இருக்கும் வரைதான் அவன் மனிதன்.உயிர் போய் விட்டால் அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்,அந்த உடலுக்கு பிணம என்று பெயராகும் .

    அதேபோல் ஒரு உயிரை அழித்தால்,அந்த உயிர்போன பிறகு அதற்கு பெயர் பிணம என்பதாகும் ,மனிதன் இறந்தால் சுடுகாட்டில் பிதைக்கிறோம்.வாயில்லாத ஆடு மாடு,கோழி ,பன்றி ,போன்ற ஜீவன்கள் இறந்தால் மனிதன் வயிற்றில் பிதைக்கிறோம் .மனிதன் வயிறும் சுடுகாடுதான் என்பதை உணரவேண்டும்.சுடுகாட்டில் எண்ண இருக்கும்.அங்கு யார் வாழ்வார் .என்பதை நினைத்து பாருங்கள் ,மனிதன் மனிதனாக வாழவேண்டுமானால்.தாவர உணவுதான் சிறந்ததாகும்.

    இன்று உலகம் முழுவதும் தீவிரவாதம்.மதவாதம் நக்சல் பார்ட்டிகள், கொலைகொள்ளைகள்.இலங்கை படுகொலை.களவு,கற்பழிப்பு,போனற,கொடுரமான செயல்கள் யாவும் செய்பவர்கள் யார் என்பதை சிந்தித்து பாருங்கள்,அனைவரும் மிருகத்தின் புலால் உணபவர்கள் என்பது தெளிவாகத்தெரியும்,மிருகத்தை தின்பவர்கள் அறிவு மிருக (அறிவு) குணமாகத்தான் இருக்கும் என்பது அறிவியல் வல்லுனர்களின் கருத்தாகும் .

    ஆனால் இதை வள்ளலார் 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே தெளிவாக விளக்கியுள்ளார் .திருவள்ளுவரும் 2000,ஆண்டுகளுக்கு முன்னாடியே தெரியப்படுத்தி உள்ளார்.மனிதன் இதையெல்லாம் அறிந்து தெரிந்து புரிந்து கொள்ளாமல் மனம் போனபடி வாழ்ந்து கொண்டு இருக்கிறான்

    வள்ளலார் பாடல் வருமாறு '-

    நலிதரு சிறிய தெய்வம் என்று ஐயோ
    நாட்டிலே பலபெயர் நாட்டிப்
    பளிதர ஆடு பன்றிக் ,குக்குடங்கள்(கோழி )
    பலிகடா முதலிய உயிரைப்
    போலியுறக் கொண்டே போகவுங் கண்டே
    பந்தி நொந்து உளம நடுக் குற்றேன்
    கலியுறு சிறிய தெய்வ வேங்கோயில்
    கண்டகாலத்தும் பயந்தேன் .

    இப்படி பலபாடல்கள் திரு அருட்பாவில் பதிவு செய்துள்ளார்கள் .

    திருவள்ளுவர் திருக்குறளில் இரண்டு அதிகாரம் கொல்லாமை புலால் மறுத்தல் பற்றி மிகவும் தெளிவாக எழுதிவைத்துள்ளார்

    தன்ஊன் பெருக்கற்கு பிருதூன் உண்பான்
    எங்கணும் ஆளும் அருள் .

    கொல்லான் புலால் மறுத்தானை எல்லா
    உயிர்களும் கை கூப்பி தொழும் .

    என்கிறார் திருவள்ளுவர் இவைபோல் இருபது குறள்கள் உள்ளன.இதையெல்லாம் ஏன் எழுதி வைத்துள்ளார்கள் என்பதை மனிதர்கள் சற்று சிந்தித்து பார்க்கவேண்டாமா ?

    உலகிலேயே பெரிய குற்றம் எதுவென்றால் பிற உயிர்களை கொலை செய்வதும்,அதனுடைய புலாலை (மாமிசம் ) உண்பதும் என்பதை அனைவரும் உணரவேண்டும்..இவைகளுக்கு கடவுளிடம் மன்னிப்பு கிடையாது .

    நம்முடைய குழந்தைக்கு உடலில் எதாவது ஒரு கீறல் பட்டால் எவ்வளவு துடி துடிக்கிறோம்.அதுபோல் வாயில்லாத ஜீவனை கத்தியை வைத்து அறுக்கின்ற போத

  • kathirvelu - 12 years ago

    நன்மை தீமை என்பவை யாவை ?

    நன்மை தீமை என்பவை யாவை ?

    கடவுளது திருஅருளை எவ்வாறு பெற வேண்டுமானால் ,அருள் என்பது கடவுள் தயவாகும் .ஜீவ காருண்யம் என்பது ஜீவர்கள் தயவாகும்ஆதலால் சிறிய வெளிச்சத்தைக் கொண்டு பெரிய வெளிச்சத்தைப் பெறுவது போல் ,சிறிய தயவாகிய ஜீவ தயவைக் கொண்டு பெரிய தயவாகிய கடவுள் அருளைப் பெற வேண்டும் .

    அக்கடவுள் தன்மை எத்தகை உடையது என்றால் .நமது ஆன்ம அறிவாகிய புத்தி தன்மைக்கு தகுந்த வாறு நன்மை தீமையை விளக்கி காட்டுவதாய் உள்ளது, அறிபவர்கள் அறிபவர்களின் தன்மைக்குத் தகுந்தவாறு அருள் விளங்கும் .எப்படி எனில் .

    பிண்ட அண்டத்தில் எவ்வண்ணம் விளங்குகிறது என்றால் !

    காண்பார் கானுமிடம் காணப்படும் இடம் --அறிவார் அறியும்இடம் ஆரியப்படும் இடம் --தூண்டுவார் தூண்டும் இடம் தூண்டப்படும் இடம் ,சுவைப்பார் சுவைக்கும் இடம் சுவைக்கப்படும் இடம் ,அனுபவிப்பார் அனுபவிக்கும் இடம் அனுபவிக்கப் படும் இடம் .கருதுவார் கருதும் இடம் கருதப்படும் இடம் .முகருவார் முகரும் இடம் முகரப்படும் இடம் ,கேட்பார் கேடக்கமிடம் .கேட்கப்படும் இடம் ,முதலியவை விளங்கும்

    இவ்வண்ணம் விளங்கும் அருளை நாம் பெறுவதற்கு உபாயம் என்ன? அறிவால் நன்மை தீமையை விசாரித்து நன்மையே உருவாக்கி விளங்கும் ஆன்ம அறிவைக் கொண்டு {மன அறிவை விடுத்து }இடைவிடாது நமது ஆன்மா விளங்கும் இடமான புருவ மத்தியின் கண் மனத்தை செலுத்த வேண்டும் .அப்படி செய்து வந்தால் ஆன்மாவில் உள்ள அருள் சுரக்கும் அருளைப் பெறலாம்

    புண்ணிய பாவம் நம்மை எவ்வாறு அடைகின்றன.நம்முடைய வாழ்க்கையில் ஆரம்பித்தில் சுகமாயும் பின் துக்கமாயும் இருப்பது பாவமாகும் .ஆரம்பித்தில் துக்கமாயும் பின் சுகமாயும் இருப்பது புண்ணியமாகும் .

    புண்ணியம் பாவங்கள் நம்மை எவ்வாறு அடைகின்றன என்றால் .மனம் ,வாக்கு .காயம் {உடம்பு }என்னும் மூன்றின் வழியாக அடையும்.மனத்தின் இடத்தில் நான்கும் .வாக்கின் இடத்தில் நான்கும் ,சரீரத்தின் இடத்தில் நான்கும் ஆகப பன்னிரண்டு வகையாய் நம்மை அடையும்.அவை யாவன என்பதை பார்ப்போம் .

    மனம் ;-
    மனத்தினால் பரதாரக மனம் பண்ண நினைத்தல் .அன்னியருடைய சொத்தை அபகரிக்க நினைத்தல் ,அந்நியருக்கு தீங்கு செய்ய நினைத்தல்,முடியாத காரியங்களை நினைத்து அக்காரியம் அந்நியர்களுக்கு முடிந்ததை நினைத்து பொறாமை அடைதல் இவை நான்கும் மனத்தினால் செய்யும் பாவங்களாகும்.

    வாக்கு;
    பொய் சொல்லல ,கோள் சொல்லல,புறங் கூறல்,வீணுக்கு அழுதல் .இவை நான்கும் வாக்கினால் உண்டாகும் பாவாஸ் செயல்களாகும் .

    தேகம் {சரீரம் }
    தேகத்தினால் பிறர மனைவியை தாழுவதல். புசிக்கத் தகாத விரோத ஆகாரங்களை [ மாமிசம் அதாவது புலால் இறைச்சி }புசித்தல் .அந்நியருக்கு இம்சை செய்தல் தீங்கு செய்கின்றவர்களைத் தடுக்காமல் அவர்களுக்கு உபகாரம் செய்தல் இவை நான்கும் சரீரத்தால் செய்யும் பவங்கலாகும் .

    புண்ணியம் என்பது ;--

    மனம் ,
    இவை போன்றவைகளை தவிர்த்து அந்நியர்களுக்கு நன்மை உண்டாக நினைத்தல்,பொறாமை அடையாது இருத்தல்,அன்னியர் சொத்தை தனதாக்க என்னாது இருத்தல் ,தனது மனைவியைத் தவிர அந்நியமான பெண்களைத் தாய் சகோதரி முதலியவர்களாக சிந்தித்தல் ,இவை மனத்தால் வரும் புண்ணியமாகும் .

    வாக்கு ;--
    பொய் சொல்லாமை ,கோள் சொல்லாமை இன் சொல்லாடல்,இடை விடாது கடவுளை நினைத்தால் இவை நான்கும் வாக்கால் வரும் புண்ணியமாகும் ,

    தேகம் '-
    அந்நியர்களுக்கு தீங்கு உண்டாகும் காலத்தில் எந்த விதத்திலாவது அதை விலக்கல முதலான நன்மையை செய்தல் தேகத்தால் உண்டாகும் புண்ணியமாகும் .

    அடுத்து அறிந்து செய்த பாவங்களும்,அறியாது செய்த பாவங்களும் எவ்வாறு நீங்கும் அறிந்து பாவங்கள் செய்த பின் ,தாம் பாவச செயல்களை முன்னமே தெரிந்தும் மோகத்தாலும் ,மறதியாலும்,அபி மானத்தாலும் அகங்காரத்தாலும் ,செல்வா செருக்காலும் தாட்சன்ய உடன் பாட்டாலும் உணவு பற்றியும் ,புகழ் பற்றியும் ,வழக்கம் பற்றியும் செய்து விட்டோமே என்று மனம் வருந்தி ,பசித்த ஏழை களுக்குஅன்ன விரயம் {அதாவது உணவும்} ,ஆதரவு அற்ற ஏழைகளுக்கும் .அதரவு அற்ற முதியோர்களுக்கும் நம்மால் முடிந்த அளவு உபகாரம்,ஜீவகாருண்யம் செய்து வந்தால் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் குறைந்து விடும் .

    அடுத்து நான் செய்த பாவக் காரியங்கள் என்னை விட்டு நீங்க வேண்டும் என்று இடை விடாது உண்மைக கடவுளாகிய அருட்பெரும் ஜோதியை இடை விடாது தோத்திரம் செய்தும் ,பாராயணம் செய்தும் வேண்ட வேண்டும் விருந்தினர்களுக்கு ,விருந்து உபசரிப்பு முடிந்த அளவு இடை விடாது செய்து வரவேண்டும் .

    இப்படி செய்ய வில்லை என்றால் மனத்தால் செய்யும் பாவங்களுக்கு சண்டாள தேகங்களும் .வாக்கால் செய்த செய்த பாவங்களுக்கு மிருகம் முதலான தேகங்களும் .தேகத்தால் செய்த பாவங்களுக்கு மரம முதலான தேகங்களும் உண்டாகும் .அடுத்து மனிதப் பிறவி கிடைக்கும் என்பது உறுதி அல்ல !ஆதாலால் மேல் சொ

  • kathirvelu - 12 years ago

    தியானம் செய்யும் முறை !
    தியானம் செய்யும் முறை !

    தியானம் செய்ய வேண்டுமானால் கண்ணை மூடிக் கொண்டு தியானம் செய்யக் கூடாது.கண்ணை திறந்து கொண்டுதான் செய்ய வேண்டும் நம் வீட்டில் தனியாக ஒரு அரை இருக்க வேண்டும் அந்த அறையில் நான்கு சதுரம் உள்ள கண்ணாடிக் கூண்டு விளக்கு வைக்க வேண்டும் அதன் மத்தியில் ஒரு அகல விளக்கோ அல்லது உலோகத்தால் செய்த விளக்கோ வைக்க வேண்டும் அதில் நல்ல எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி சிறிய திரிப போட்டு தீபம் ஏற்ற வேண்டும் ,அதற்கு முன்னாடி நாம் அமர்ந்து கொள்ள வேண்டும் .அந்த விளக்கின் தீப ஒளியை இடை விடாது கண்கள் வழியாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் .

    நம்மால் எவ்வளவு நேரம் பார்க்க முடியுமோ அவ்வளவு நேரம் பார்க்க வேண்டும் இதற்கு நேரம் என்பது கிடையாது நேரம் கிடைக்கும் போதெல்லாம் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம் .இதனால் என்ன பயன் என்பதை பார்ப்போம் .

    நம் உடம்பின் ஐம புலன்களில் முக்கியமானது முதன்மையானது கண்களாகும் கண்களின் வழியாகத்தான் நாம் அனைத்தும் பார்க்கிறோம் பார்க்கும் அனைத்தும் மனதில் பதிவாகிறது .கண்கள் எங்கு செல்கிறதோ அங்கு மனமும் செல்லும் கண்களில் பார்க்காதது மனதில் பதிவாகாது மனதை அடக்க வேண்டுமானால் கண்கள் வழியாகத்தான் அடக்க முடியும் .

    கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்தால் இல்லாத கற்பனைகளும் தேவை இல்லாத வெளி சிந்தனைகளும் தோன்றி மனம் அலைபாயுமே தவிர மனம் அடங்காது ,மனம் என்பது ஒரு பேய் குரங்கு அதை அடக்க முடியாது ஒளியின் வழியாகத்தான் அடக்க முடியும் அதை கண்கலால்தான் அடக்க முடியும் வேறு வழிகள் எல்லாம் பொய்யான மாயா ஜாலங்களாகும்.

    ஆதலால் கண்கள் உருவம் அற்ற ஒளியை தியானம் செய்ய வேண்டும் .கண்களும் ஒளி-- ,தீபமும் ஒளி --இரண்டும் ஒளியாக இருப்பதால் ஜீவனும் ஒளி --ஆன்மாவும் ஒளியாகும்--,நாம் பிறந்ததில் இருந்து கண்கள் வழியாகப் பார்த்த அனைத்தும் ஆன்மாவில் பதிவாகி உள்ளது .அந்த பதிவுதான் நினைவு அலைகளாக நமக்கு துன்பமும் துயமும் அச்சமும் தந்து கொண்டு வருகிறது .அந்த பதிவுகளை நீக்கினால் மனம் அமைதி பெரும்

    அந்த பதிவுகளை அகற்ற தீப ஒளி தியானம்தான் முக்கியமானதாகும் அப்படியே தினமும் தீபத்தை பார்த்துக் கொண்டு வந்தால் அந்த ஒளியும் உருவம் மறைந்து பின் புருவ மத்தியில் உள்ள ஆன்ம ஒளியைக காணும் செயலுக்குஅதே கண்கள் வந்து விடும் பின் .உருவம் கரைந்து அருவமாகும் .துவைதமாக இருந்தால் அத்துவைதம் தானே ஆகும் .எப்படி எனில் பார்க்கும் தான் கெடுவது அத்வைதம் ,பார்க்கப் படும் பொருளும் கெடுவது அதீதம் இதுதான் சத்தியமான உண்மையாகும் .

    மலம ஒழிப்பு என்பார்கள் அந்த மலத்தை ஒழிப்பதற்கு தீட்சை கொடுப்பதாக சொல்லுவார்கள் மலம என்பது யாதெனில் ஆணவம் மாயை கன்மம் மாமாயை பெருமாயை என்னும் ஐந்து மலங்களாகும்,அதற்கு மலம ஒழிப்பு என்பார்கள் தீட்சை என்பது யாதெனில் தீ என்பது மலம ட்சை என்பது ஒழிவு அதற்கு மலம ஒழிப்பு என்று பெயராகும் பலபேர் விபரம் தெரியாமல் நிறைய பணம் கட்டி தேவை இல்லாமல் தியானம் யோகம தவம போன்ற தவறான வழிகளில் சென்று செய்து வருகிறார்கள் அப்படி செய்வது அறியாமையாகும் அறியாத மக்களை ஏமாற்ற நிறைய அமைப்புகள் உருவாகி விட்டது

    அறியாமை என்னும் மலத்தை வேறு யாராலும் ஒழிக்க முடியாது அவரவர்கள் ஆன்மாவில் பதிவானதை அவரவர்களே தான் ஒழிக்க முடியும் ,ஒழிக்க வேண்டும்

    கண்ணில கலந்தான் கருத்தில் கலந்தான் என்
    எண்ணில் கலந்தே இருக்கின்றான் .
    கையற விலாது நடுக கண் புருவ பூட்டு
    கண்டு களி கொண்டு திறந்து உண்டு நடு நாட்டு .
    வள்ளலார் பாட்டு ,

    மேலே சொல்லியபடி செய்து வாருங்கள் உங்களுக்கே அனுபவம் தானே கிடைக்கும் ஏதாவது சந்தேகம் இருந்தால் எங்களிடம் தொடர்பு கொள்ளுங்கள் இலவசமாக சொல்லித் தரப்படும் .இதுவே சன்மார்க்க தியானமாகும் .

    போன் நெம்பர் ;-0424 2401402 -செல் --9865939896 .

    உங்கள் அன்பு கொண்ட ஆன்மநேயன் --கதிர்வேல

Leave a Comment

0/4000 chars


Submit Comment